Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 :* மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள். *பதவுரை:*  *மன்னிய சீர்* - மிகவும் சிறப்பு பொருந்திய  *மார்கழியில் கேட்டை இன்று* - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று *மாநிலத்தீர்* - உலகத்தீர் *என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன்* - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன்  *துன்னுபுகழ்* - மிக்க புகழையுடைய  *மாமறையோன்* - பரம வைஷ்ணவரான (வைதீகரான)  தொண்டரடிப்பொடியாழ்வார்  பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால்  *நான்மறையோர் கொண்டாடும் நாள்* - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள்