Skip to main content

Posts

Showing posts with the label Vyakyanam

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2 :  *கற்றோர்கள் தாமுகப்பர் -* கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் இப்பிரபந்தத்தை உகப்பாய் ஏற்றிடுவார்  *கல்விதன்னில் ஆசையுள்ளோர் -* கற்பதனில் ஆசையுள்ளோர்   *பெற்றோமெனவுகந்து* - இது கிடைக்கப்பெற்றோமே என கொண்டாடி   *பின்புகற்பர்* - பிறகு இப்பிரபந்தத்தை கற்பார்கள்  *மற்றோர்கள்* - மேலே சொன்னது போல் இவ்விரண்டு நிலைகளிலும் சேராதோர்  *மாச்சர்யத்தாழிகளில்* - வெறுப்பினால் இதனையிகழ்ந்தால்   *வந்ததென்நெஞ்சே!* - நெஞ்சே, நமக்கு என்ன இழப்பு உள்ளது?  *இகழ்கை* - இப்படிப்பட்ட கிரந்தத்தினை இழப்பதென்பது   *ஆச்சர்யமோதானவர்க்கு* - ஆச்சர்யமானதா? (இல்லையே)

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 :  *பொய்கையார்* - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார்   *பூதத்தார்* - பூதத்தாழ்வார் இரண்டாமவர்  *பேயார்* - மூன்றாவதாக தோன்றியவர்   *புகழ்மழிசை ஐயன்* - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர்  *அருள்மாறன்* - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார்   *சேரலர்கோன்* - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆறாமவர்  *துய்யப்பட்ட நாதன்* - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர்  *அன்பர்தாள்தூளி* - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர்   *நற்பாணன்* - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர்   *நன்கலியன்* - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர்   *ஈதிவர்* - (ஈது + இவர்)  இதுவே இவர்களது   *தோற்றத்தடைவாமிங்கு* - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 3: பதவுரை

உபதேசஇரத்னமாலை - பாசுரம் 3:   *ஆழ்வார்கள் வாழி -* பன்னிரு ஆழ்வார்களுக்கு பல்லாண்டு வாழி  *அருளிச்செயல் வாழி* - அவ்வாழ்வார்கள் அருளிசெய்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் வாழி  *தாழ்வாதுமிழ்* - குறைவொன்றும் இல்லாத  *குரவர் தாம் வாழி* - ஆச்சார்யர்கள் வாழி  *ஏழ்பாரும் உய்ய* - ஏழுலகத்தினில் வாழ்பவர்கள் யாவரும் வாழ  *அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி* - உபயமாக ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிய அனைத்தும் வாழி  *செய்யமறை தன்னுடனே சேர்ந்து* - இவை அனைத்தும் வேதங்களோடு கூடி வாழ்ந்திடுகவே!

உபதேச இரத்னமாலை - பாசுரம் 1: பதவுரை

பாசுரம் 1 :  *எந்தை* - என் ஸ்வாமியான   *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய    *இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த   *உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி   *பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்   *உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்   *மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.