Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 10 பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 10: பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 10:*  கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று  காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால்  ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான்  கற்றதிற்பின் கொண்டாடும் நாள் * பதவுரை :*   *கார்த்திகையுரோஹிணி நாள்* - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள்   *காண்மினின்று* - இன்று கண்டுகொள்ளுங்கள்   *காசினியீர்* - உலகத்தீரே!    *வாய்த்த புகழ்ப்பாணர்* - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார்   *வந்துதிப்பால் -* திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு   *ஆத்தியர்கள்* - ஆஸ்திகர்கள்  அன்புடனே தான் - ப்ரியமுடன்   *அமலனாதிபிரான் கற்றதிற்பின்* - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே  *கொண்டாடும் நாள்* - ஆராதித்து கொண்டாடும் நாள்