*உபதேச இரத்னமாலை - பாசுரம் 10:* கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால் ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதிற்பின் கொண்டாடும் நாள் * பதவுரை :* *கார்த்திகையுரோஹிணி நாள்* - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள் *காண்மினின்று* - இன்று கண்டுகொள்ளுங்கள் *காசினியீர்* - உலகத்தீரே! *வாய்த்த புகழ்ப்பாணர்* - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் *வந்துதிப்பால் -* திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு *ஆத்தியர்கள்* - ஆஸ்திகர்கள் அன்புடனே தான் - ப்ரியமுடன் *அமலனாதிபிரான் கற்றதிற்பின்* - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே *கொண்டாடும் நாள்* - ஆராதித்து கொண்டாடும் நாள்
YathirajaSampathKumar Iyengar's Blog