*உபதேச இரத்னமாலை -* பாசுரம் 6 : ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும் பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். பாசுரம் 6 : *ஐப்பசியில்* - ஐப்பசி மாதத்தில் *ஓணம் அவிட்டம் சதயம் இவை* - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள் *ஒப்பிலவா நாள்கள்* - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்) *உலகத்தீர்* - உலகிலுள்ளீர்களே! *எப்புவியும் பேசுபுகழ்* - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த *பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்* - முதல் ஆழ்வார்களாகிய பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் *தேசுடனே தோன்று சிறப்பால்* - சிறந்த தேஜஸுடனே / புகழுடன் திருவவதாரம் செய்தமையால்
YathirajaSampathKumar Iyengar's Blog