Skip to main content

Posts

Showing posts with the label திருப்பாவை பாசுரம் 26 - பதவுரை

திருப்பாவை பாசுரம் 26 - பதவுரை

பாசுரம்: மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே Q < திருப்பாவை-இருபத்தாறாம் பாட்டு. ||| திருப்பாவை போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலி னிலையா யருளேலோ ரெம்பாவாய். பதவுரை: மாலே-(அடியாரிடத்தில்) அன்புடையவனே! மணி வண்ணா-நீலரத்னம்போன்ற வடிவையுடையவனே! ஆலின் இலையாய்-(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் கண்வளர்ந்தவனே!  மார்கழி நீராடுவான்-மார்கழி நீராட்டத்திற்காக மேலையார்-முன்னோர்கள் செய்வனகள்-செய்யும் கிரியைகளுக்கு வேண்டுவன-வேண்டும் உபகரணங்களை கேட்டியேல் -கேட்டாயாகில் (அவற்றைச் சொல்லுகிறோம்;)  ஞாலத்தை எல்லாம்-பூமிமுழுவதும் நடுங்க-நடுங்கும்படி முரல்வன-ஒலிக்கக்கூடிய பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே-பால்போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம்போன்ற சங்கங்கள் - சங்கங்களையும் போய் பாடு உடையன-மிகவும் இடமுடையனவாய் சால பெரு-மிகவும் பெரியனவான பறை-பறைகளையும் பல்லாண்டு இசைப்பார்- திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் கோலம் விளக்கு-மங்கள தீப...