Skip to main content

Posts

Showing posts with the label பதவுரை

உபதேச இரத்னமாலை - பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே -    கோயில் கந்தாடை அண்ணன். முன்னம் - முற்காலத்தில்  திருவாய்மொழிப்பிள்ளை - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  தாம் உபதேசித்த - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும்  ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  நேர் தன்னின் படியை தணவாத சொல் - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான மணவாளமுனி - மணவாளமாமுனி தன் அன்புடன் செய் - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  உபதேசரத்னமாலை தன்னை - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  தம் நெஞ்சு தன்னில் - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே தரிப்பவர் - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  தாள்கள் சரண் நமக்கே. - திருவடிகளே நமக்கு தஞ்சம். உபதேச இரத்னமாலை - பாசுரம் 1 : எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்...