Skip to main content

Posts

Showing posts with the label archirathi maargam

அர்ச்சிராதி மார்க்கம்

அர்ச்சிராதி மார்க்கம்  (மோட்சம் அடையும் ஆத்மாக்கள் மட்டுமே இந்த வழியை அணுக முடியும். மீதமுள்ளவர்களுக்கு அல்ல) "முதலில் ஜீவாத்மா பிரிதல்": முதுகுத்தண்டை மத்தாக வைத்துக் கொண்டு உடல் முழுவதையும் கடைந்து, புலன்கள் மற்றும் பூத சூஷ்ஷுமங்கள் அனைத்தையும் ப்ராணவாயு மற்றும் மனதுடன் சேர்த்து கொட்டி ஆத்மாவை சரீரத்தில் இருந்து பிரித்து விடுகிறார் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன். "இரண்டாவதாக  ஜீவாத்மா வெளியேறுதல்": இதயத்தில் இருந்து தலைக்கு 101 மிக நுண்ணிய நரம்புகள் (நாடிகள்) பிரயாணம் செய்கின்றன. அதில் 101வது நாடி சூஷூம்னா நாடி ஆகும். நம் ஆத்மா இந்த சூஷூம்னா நாடியை பற்றினால் தான் வைகுண்டம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தில் ப்ரயாணிக்க முடியும். பூரண இருட்டிலே வைகுண்டநாதனே தன் திருமேனி ஒளியாலே ஆத்மாவுக்கு 101வது நாடியை பிடித்து கொடுக்க ஆத்மாவும் அதைப்பற்றி பிரம்மரந்திரம் என்னும்படியான உச்சம் தலையின் ஒரு சிறு துளை வழியாக வெளியேறுகிறது. மூன்றாவதாக "வைகுண்ட மார்க்கம்": ஆத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி பன்னிரண்டு (12) லோகங்கள் பிரயாணிக்க மிக நுண்ணிய உடலை வைகுண்டநாதன் கொடுக்க...