Skip to main content

அர்ச்சிராதி மார்க்கம்

அர்ச்சிராதி மார்க்கம் 

(மோட்சம் அடையும் ஆத்மாக்கள் மட்டுமே இந்த வழியை அணுக முடியும். மீதமுள்ளவர்களுக்கு அல்ல)

"முதலில் ஜீவாத்மா பிரிதல்":

முதுகுத்தண்டை மத்தாக வைத்துக் கொண்டு உடல் முழுவதையும் கடைந்து, புலன்கள் மற்றும் பூத சூஷ்ஷுமங்கள் அனைத்தையும் ப்ராணவாயு மற்றும் மனதுடன் சேர்த்து கொட்டி ஆத்மாவை சரீரத்தில் இருந்து பிரித்து விடுகிறார் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன்.

"இரண்டாவதாக ஜீவாத்மா வெளியேறுதல்":

இதயத்தில் இருந்து தலைக்கு 101 மிக நுண்ணிய நரம்புகள் (நாடிகள்) பிரயாணம் செய்கின்றன. அதில் 101வது நாடி சூஷூம்னா நாடி ஆகும். நம் ஆத்மா இந்த சூஷூம்னா நாடியை பற்றினால் தான் வைகுண்டம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தில் ப்ரயாணிக்க முடியும். பூரண இருட்டிலே வைகுண்டநாதனே தன் திருமேனி ஒளியாலே ஆத்மாவுக்கு 101வது நாடியை பிடித்து கொடுக்க ஆத்மாவும் அதைப்பற்றி பிரம்மரந்திரம் என்னும்படியான உச்சம் தலையின் ஒரு சிறு துளை வழியாக வெளியேறுகிறது.

மூன்றாவதாக "வைகுண்ட மார்க்கம்":

ஆத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி பன்னிரண்டு (12) லோகங்கள் பிரயாணிக்க மிக நுண்ணிய உடலை வைகுண்டநாதன் கொடுக்க ஆத்மாவானது கீழ்க்கண்ட லோகங்களில் பிரயாணித்து மூல ப்ரக்ருதியை கடந்து விரஜா நதியை அடைகிறது:

  1. அர்ச்சிஸ் (ஒளி)
  2. பகற்பொழுது
  3. சுக்லபக்ஷம்
  4. உத்தராயணம்
  5. சம்வத்ஸரம்
  6. வாயுலோகம்
  7. சூரியமண்டலம்
  8. சந்திரமண்டலம்
  9. வித்யுத்லோகம் (மின்னல்)
  10. வருணலோகம்
  11. இந்திரப்பட்டணம்
  12. சத்யலோகம் (பிரம்மா)

அமானவன் என்கிற மின்னல், வித்யுத் லோகத்திலிருந்து ஆத்மா கூடவே வந்து, பின்பு ஊழிப் பிரளயம் போன்ற தேஜஸ் நிறைந்த உலகத்தில் நுழைந்து அங்கு காணப்படும் விரஜா நதியில் இந்த ஆத்மாவானது நீராடியதும், தற்போதுள்ள நுண்ணிய சரீரமும்  களையப்படும்.

"நான்காவதான அத்தியாத்சர்யமான வைகுண்டம் சேர்தல்"

நுண்ணிய சரீரமும் களையப்பட்டு சூக்ஷமமாக ஜோதிஸ்வ்ரூபமாக உள்ள ஆத்மாவை  அமானவன் (மாசற்றவன்), விரஜயின் அக்கரையில் சேர்க்க, ஆத்மாவுக்கு அப்ராக்ருத சரீரம்  (பிருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்கள் இல்லா உடல்) கிடைக்கப்பெற்று அதீத ஞானம் பல்கும். 

ஞானம் - சாலோக்கியம், சாமிப்யம், சாருப்யம் மற்றும் சாயுஜ்யம்.

சாலோக்யம் - பரமாத்மாவிடம் வருவது. 

சாமீப்யம் - அருகாமையில் செல்வது

சாருப்யம் - அவனுருவாகி ஒளிர்விடும் நிலை

சாயுஜ்யம் - இரண்டறக்கலத்தல் / அவனைப்போலவே இருத்தல்  

"ஐந்தாவதாக ஸ்ரீ வைகுண்டம்":

ஆத்மாவுக்காக வைகுண்ட வாசல் திறந்து, "வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை" என்கிறபடி அப்சரஸ்கள் வரவேற்க ஆத்மா உள்ளே நுழைந்து, திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வைகுண்டநாதனை கண்களால் ஆரப்பருகி, அவன் கண்களில் பெருகிவரும் கருணைப்பிரவாகத்தை தாங்கவொண்ணாமல் "திருமணத்தூணே பற்றிநின்னு" என்னும்படியாக திருமணத்தூண்களைப்பற்றி இங்கு மலையே திருவுடம்பாக இருக்கிற பெருமாள் "சேஷாத்திரி" என்னும் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் கால் கொண்டு மேலேறி  ஸ்ரீவைகுண்டநாதனை அணுக ஸ்ரீவைகுண்ட நாதனும் ஆத்மாவை அழைத்து, மடியில் அமர்த்தி, ஆரதழுவி, உச்சிமுகர்ந்து, குளிர்ந்து கடாக்ஷித்து பின்பு வைகுண்டத்தில் லயிக்கவிட ஆத்மாவும் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப்போலவே சதுர்புஜ சங்கு சக்ரதாரியாய் நித்யஸூரிகளோடே நித்யவாஸம் செய்து வருகை.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.