Skip to main content

Posts

Showing posts with the label திருப்பாவை தனியன்கள் - Tiruppavai Taniyans Vyakyanam

திருப்பாவை தனியன்கள் - Tiruppavai Taniyans Vyakyanam

தனியன்கள் வ்யாக்யானம் தனியன் 1: நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ| ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:|| பதவுரை: யா கோதா- எந்த ஆண்டாள்,  நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் — நப்பின்னைப் பிராட்டியினுடைய திருமார்பிலே உறங்குபவனாய்,   ஸ்வோச் சிஷ்டாயாம்- தன்னாலே சூடிக்களையப்பட்ட, ஸ்ரஜி-மாலையிலே, நிகளிதம்-கட்டப்பட்டவனாயிருக்கும், க்ருஷ்ணம்-க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை,  உத்போத்ய-(துயில்)உணர்த்தி, ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தம்-நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களினால் ஸித்திக்கிற,  ஸ்வம் - தன்னுடைய,   பாரார்த்யம்-பாரதந்த்ர்யத்தை, அத்யாபயந்தீ-அறிவித்து பலாத்க்ருத்ய-வலுக்கட்டாயமாக  புங்க்தே-அனுபவிக்கிறாளோ,  தஸ்யை- அப்படிப்பட்ட ஆண்டாளுக்கு   பூயோ பூய ஏவ- மறுபடியும் மறுபடியும், இதமிதம் நம: நன்றியோடுகூடின நமஸ்காரம் அஸ்து-ஆகவேண்டும். தனியன் 2: அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை ...