Skip to main content

திருப்பாவை தனியன்கள் - Tiruppavai Taniyans Vyakyanam

தனியன்கள் வ்யாக்யானம்

தனியன் 1:

நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ|
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:||

பதவுரை:

யா கோதா- எந்த ஆண்டாள், 

நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் — நப்பின்னைப் பிராட்டியினுடைய திருமார்பிலே உறங்குபவனாய்,  

ஸ்வோச் சிஷ்டாயாம்- தன்னாலே சூடிக்களையப்பட்ட,

ஸ்ரஜி-மாலையிலே,

நிகளிதம்-கட்டப்பட்டவனாயிருக்கும்,

க்ருஷ்ணம்-க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை,

 உத்போத்ய-(துயில்)உணர்த்தி,

ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தம்-நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களினால் ஸித்திக்கிற, 

ஸ்வம் - தன்னுடைய,
 
பாரார்த்யம்-பாரதந்த்ர்யத்தை,

அத்யாபயந்தீ-அறிவித்து

பலாத்க்ருத்ய-வலுக்கட்டாயமாக 

புங்க்தே-அனுபவிக்கிறாளோ, 

தஸ்யை- அப்படிப்பட்ட ஆண்டாளுக்கு
 
பூயோ பூய ஏவ- மறுபடியும் மறுபடியும்,

இதமிதம் நம: நன்றியோடுகூடின நமஸ்காரம்

அஸ்து-ஆகவேண்டும்.

தனியன் 2:

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


பதவுரை:

அன்ன வயல் - அன்னப்பறவைகள் (ஹம்ஸங்கள்) ஸஞ்சரிக்கிற வயலையுடைய,

புதுவை ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவவதரித்தருளின ஆண்டாள்,

அரங்கற்கு-ஸ்ரீரெங்கநாதனுக்கு

பன்னு-ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட,

திருப்பாவை- திருப்பாவையாகிற,

பல் பதியம் -பல பாட்டுக்களை, 

இன் இசையால்- செவிக்கினிய இசையாலே,

நல் பாமாலை-அழகிய பாட்டுக்களாகிற மாலையை, 

பாடிக் கொடுத்தாள்-பாடிக் கொடுத்தாள்,

பூமாலை-பூக்களால் ஆன மாலையை, 

சூடிக் கொடுத்தாளை-(தன் திருக்குழலிலே) சூடி (எம்பெருமானுக்குக்) கொடுத்தவளான ஆண்டாளை 

சொல்- (நெஞ்சே அனுஸந்திப்பாயாக) பாடுவாயாக.

தனியன் 3:

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்!-நாடி நீ
வேங்கடவற்கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

பதவுரை:

சூடி- (மாலையை திருக்குழலிலே) சூடி,

கொடுத்த—(எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த, 

சுடர் கொடியே-பிரகாசிக்கும் பொற்கொடிபோன்ற வடிவையுடையவளே! 

தொல்-பழமையான,

பாவை-திருப்பாவையை,

பாடி அருளவல்ல-பாடி உபகரிக்க வல்லவளாய், 

பல் வளையாய் - பல வளைகளை அணிந்தவளாய் விளங்குபவளே!

நாடி- (மன்மதனை) அடைந்து, 

‘நீ-(மன்மதனான) நீ. 

என்னை- (அவனைக் காண ஆசைப்படுகிற) அடியேனை. 

வேங்கடவற்கு—திருவேங்கட மலையிலே வாழும் எம்பெருமானுக்கு, 

விதி- (கைங்கர்யம் செய்யும்படி) விதிக்கவேணும்'. 

என்ற-என்று அருளிச்செய்த, 

இம் மாற்றம்-இப்பாசுரத்தை, 

நாம்- (உனக்கு என்றும் அடியராயிருக்கிற) நாம்

கடவா வண்ணமே - மீறாதபடி, 

நல்கு-உபகரிக்கவேண்டும், கடாக்ஷிக்கவேண்டும்.


Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.