Skip to main content

Posts

Showing posts with the label Manthra

மந்திர ஸம்ஸ்காரம் - ரஹஸ்யத்ரயம்

மந்திர  ஸ ம்ஸ்காரம் -  ரஹஸ்யத்ரயம் மந்திர சம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஓர் அங்கம் ஆகும். இதில் ரஹஸ்யத்ரயம் என்று கொண்டாடப்படும் திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியன அடக்கம். திருமந்த்ரத்திற்கு  "மந்திர ராஜம்" என்ற பெயருண்டு. திருமந்திரம்: அஷ்டாக்ஷர (எட்டு எழுத்து உள்ளது) திருமந்திரம்:  “ஓம் நமோ நாராயணாய” இதில், ஓம் என்ற சொல் தான் ப்ரணவம் எனப்படுவது. இதிலிருந்து தான் அனைத்தும் ஏற்பட்டது. ப்ரணவம் தான் நமக்கும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனுக்கும் உள்ள பந்தத்தை உணர்த்துவது. இம்மந்திரம் பத்ரிகாஸ்ரமத்தில் நாராயண ரிஷியால் நரனுக்கு உபதேசிக்கப்பட்டதாகும். ப்ரணவமான "ஓம்" என்பதைப் பிரித்தால் அ, உ, ம கிட்டும். இங்கு  அ -  பரமாத்மா  உ - சேஷத்துவம் (தாஸ்யம், அடிமை செய்வது) ம - ஜீவாத்மா ஓம் - ஜீவாத்மா பரமாத்மாவுக்கே அடிமை செய்வது "நமோ" என்பதைப் பிரித்தால் ந, மோ ந - இல்லை  மோ - எனக்கு நமோ - எனக்காக இல்லை  (பகவானுக்காக என்று இருத்தல்) "நாராயணாய" என்பதைப் பிரித்தால் நார + அயணம்  என்று கிட்டும்.  இங்கு  நார - நீர் அயணம் - இருப்பிடம் நாரா...