கலியுக தர்மம் (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) ஆத்யந்திகப் பிரளயம் மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப் பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான். ஆத்தியாத்மிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாகும். அது சரீரத்தைப் பற்றியதும் மனதைப் பற்றியதும் ஆகும். தலைவலி பீனசம், ஜ்வரம், சூலை, பகந்தரம், குன்மம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவை போன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை. காமம், குரோதம், பயம், த்வேஷம், லோபம், மோகம், துக்கம், சோகம், அசூயா, அவமானம், பகைபாராட்டுதல், முதலிய மனது சம்பந்தப்பட்டவை பலவாகும். ஆதி பௌதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக, பக்ஷி, மனுஷ்ய, பைசாச, ஸர்ப்ப, ராக்ஷஸஸாதிகளாலேயே உண்டாவதானால் அதுவும் பலவகைப்பட்டடது. ஆதிதைவிகம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று, வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாகும். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலு...
YathirajaSampathKumar Iyengar's Blog