Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 : பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :* மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை:* *மாசிபுனர்பூசம் காண்மினின்று* - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். *மண்ணுலகீர்* - உலகோர்களே *தேசித் திவசத்துக் கேதென்னில்* - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்  *பேசுகின்றேன்* - சொல்லுகின்றேன் கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான  *குலசேகரன்* - ஸ்வாமி குலசேகராழ்வார் *பிறப்பால்* - திருவவதாரத்தினால்  *நல்லவர்கள்* - சாதுக்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்