Skip to main content

Posts

Showing posts with the label Kaliyuga Dharmam-3

விஷ்ணு புராணம் - 3 - பிராகிருதப் ப்ரளயம்

  கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) பிராகிருதப் ப்ரளயம் "மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத்தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ் செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங்காற்றாக வீசிக்கொண்டே இருக்கும்.  பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும் ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுது செய்து ப்ரம்மரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின் மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், ப்ரம்மலோகத்திலுள்ள முமூட்சுக்களாலும்தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு ஸ்ரீவாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண்வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு ப்ரம்ம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிர...