Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 : பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :* ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் *பதவுரை:* *ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த  *வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின்  *ஏற்றத்தை* - பெருமையை  *பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள *பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன்  *சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை  *தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த  *எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்  *அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்