*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :* ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் *பதவுரை:* *ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த *வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின் *ஏற்றத்தை* - பெருமையை *பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள *பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன் *சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை *தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த *எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார் *அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்
YathirajaSampathKumar Iyengar's Blog