*உபதேச இரத்னமாலை* - பாசுரம் 7 : மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து. *மாற்றுள்ளவாழ்வார்களுக்கு* - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு *முன்னே வந்துதித்து* - முன்பு வந்து தோன்றி *நற்றமிழால்* - சிறந்த தமிழ் நூலினால் *நூல்செய்து* - சிறந்த பிரபந்தங்களை அருளி *நாட்டையுய்த்த* - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம் *பெற்றிமையோர் என்று* - போற்றத்தகுந்த பெரியோர்கள் *முதலாழ்வார்கள்*- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்) *என்னும் பேரிவர்க்கு* - என்கின்ற பெயர் இவர்களுக்கு *நின்றதுலகத்தே* - உலகத்தில் நிலைபெற்ற *நிகழ்ந்து* - நிகழ்வு நடைபெற்றது.
YathirajaSampathKumar Iyengar's Blog