Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 : பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 : பதவுரை

*உபதேச இரத்னமாலை* - பாசுரம் 7 : மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து  நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்  என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு  நின்றதுலகத்தே நிகழ்ந்து.  *மாற்றுள்ளவாழ்வார்களுக்கு* - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு   *முன்னே வந்துதித்து* - முன்பு வந்து தோன்றி    *நற்றமிழால்* - சிறந்த தமிழ் நூலினால்   *நூல்செய்து* - சிறந்த பிரபந்தங்களை அருளி   *நாட்டையுய்த்த* - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம்   *பெற்றிமையோர் என்று* - போற்றத்தகுந்த பெரியோர்கள் *முதலாழ்வார்கள்*- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்)  *என்னும் பேரிவர்க்கு* - என்கின்ற பெயர் இவர்களுக்கு  *நின்றதுலகத்தே* - உலகத்தில் நிலைபெற்ற *நிகழ்ந்து* - நிகழ்வு நடைபெற்றது.