Skip to main content

Posts

Showing posts with the label இராமாயணம் சுந்தரகாண்டம்

இராமாயணம் - சுந்தரகாண்டம் - தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்

தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்: இப்படி அனுமான் வேகமாக செல்லும் போது சுரஸையெனும் நாக கன்னிகை ஒருத்தி தேவர்களால் சொல்லிஅனுப்பப்பட்டு அனுமானது வீரத்தை மேலும் அறிய வேண்டி அதி பயங்கர ராக்ஷச சரீரத்தை எடுத்துக்கொண்டு விகாரமாய் கோர ரூபத்தை தரித்துக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்படி வந்து, அனுமானை வழிமறித்து, "ஓ வானரனே! தேவர்கள் உன்னை எனக்கு இரையாக அளித்திருக்கிறார்கள்; ஆகையால் நான் உன்னை புசிக்கும்படி என் வாயில் வந்து புகுவாயாக" என்றாள். இதைக்கேட்ட அனுமான், தான் ராமகார்யமாக மிக அவசரமாக சென்று சீதையின் நிலையறிந்து ராமனுக்கறிவித்த பிறகு, நானே உன் வாயில் வந்து விழுகிறேன் என்று சத்யம் செய்து கூறியும், சுரஸா தேவி அனுமானை நோக்கி "வானரஸ்ரேஷ்டனே, எனது வாயில் புகாமல் நீ போக இயலாது" என்று தன் அகலமான வாயை திறந்தபடி அனுமான் முன் நின்றாள்.  அனுமான் மிகுந்த கோபம் கொண்டு பத்து யோஜனை நீளமும் பத்து யோஜனை அகலமும் தன் சரீரத்தை பெருக்கினான்; உடனே சுரசையானவள் தன் வாயை இருப்பது யோஜனை தூரம் திறந்துவிட்டாள். உடனே அனுமான் முப்பது யோஜனை வளர, சுரஸை நாற்பது யோஜனையாக வளர்ந்தாள். பின்...

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமானும் மைனாக பர்வதமும்

அனுமானும் மைனாக பர்வதமும் : இப்படி அனுமான் வேகமாக செல்லும்போது சமுத்திர ராஜனானவன் இஷ்வாகு குல திலகரான சகர மஹாராஜாவால் தோண்டி (இதனால் தான் கடல் சாகரம் என்று அழைக்கப்படுகின்றது)  வளர்க்கப்பட்டவன் ஆனபடியால் இஷ்வாகு குலத்தில் உதித்த ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கின்ற அனுமானுக்கு உபகாரம் செய்ய எண்ணி அவனுடைய சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் மைநாகம் என்னும் பர்வதத்திடம் (மலையிடம்), "மலைக்கரசனே! ராமகார்யத்தின் பொருட்டு ஆகாய மார்கமாய்வரும் அனுமான் சற்று தங்கி இளைப்பாறும் பொருட்டு நீ உடனே நீரிலிருந்து ஆகாயம் நோக்கி மேலெழும்பி உபசரிப்பாயாக!" என்றான். அப்படியே அம்மைநாகமும் நீரிலிருந்து மேல் எழும்பி நின்ற அப்பர்வதத்தை அனுமான் மோதி அமிழ்த்திவிட்டான். அப்போது மிகவும் சந்தோஷித்து மைநாகம் ஒரு மானிட ரூபம் கொண்டு பர்வதத்தின் சிகரத்தில் நின்று கொண்டு அனுமானிடம், "வானரர்களில் உத்தமமான வீரா! உன்னுடைய செயல் போற்றுதலுக்குரியது. அதனால் என்னுடைய என்னுடைய சிகரங்களில் சிறிதுநேரம் இருந்து இளைப்பாறி பிறகு செல்வாயாக; ராமனுடைய முன்னோர்களால் வளர்க்கப்பட்ட சமுத்திரராஜன் உனக்கு உதவிசெய்யும் பொருட்டு என்னை ...

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்

இராமாயணம் சுந்தரகாண்டம் அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்: அதிவீர தீரனான அனுமான் மஹேந்திரகிரியின் உச்சியில் நின்றுகொண்டு தனது பிதாவான வாயுபகவானை தியானித்து வணங்கி தென் திசை நோக்கி செல்வதற்காக அனைத்து வானர வீரர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய தேகத்தை அதி பிரம்மாண்டமாக பெருக்கினான். இப்படி சமுத்திரத்தினை கடக்கவேண்டிய பெரிய தேகத்தையெடுத்த அனுமான் தன் கைகளால் அம்மலையை குலுக்கினான். அதனால் அங்கு பூத்திருந்த மரங்களெல்லாம் பூக்களை உதிர்ந்துவிட்டன. அனுமானால் மிதிக்கப்பட்ட அந்த பர்வதமானது மதயானை மதஜலத்தைப் வெளிவிடுவதுபோல் எங்கும் தண்ணீரைப் பெருகவிட்டது. அம்மலையில் அனுமானின் மிதி பட்டதனால் நெருக்கப்பட்ட குகைகளிலிருந்த பிராணிகள் விகாரமாய் கூச்சலிட்டன. அதிலுள்ள பாம்புகளெல்லாம் படம் எடுத்து ஆடிக்கொண்டு கோரமான விஷ அக்னியைக் கக்கி பற்களால் கற்களை கடித்துக்கொண்டன. அதில் வசித்துவந்த கல்வியாளர்கள் தம் மனைவியருடன் மிகவும் பயந்து கவலையுடன் ஆகாயத்தில் வளர்ந்து நிற்கும் அனுமானை கண்டு ஆச்சரியமடைந்தனர். அனுமான் ஆகாயமார்கமாக போகிறபடியால் வாலை நீட்டி தோள்களை இறுக்கி, இடுப்...