Skip to main content

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்

இராமாயணம்

சுந்தரகாண்டம்


அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்:

அதிவீர தீரனான அனுமான் மஹேந்திரகிரியின் உச்சியில் நின்றுகொண்டு தனது பிதாவான வாயுபகவானை தியானித்து வணங்கி தென் திசை நோக்கி செல்வதற்காக அனைத்து வானர வீரர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய தேகத்தை அதி பிரம்மாண்டமாக பெருக்கினான். இப்படி சமுத்திரத்தினை கடக்கவேண்டிய பெரிய தேகத்தையெடுத்த அனுமான் தன் கைகளால் அம்மலையை குலுக்கினான். அதனால் அங்கு பூத்திருந்த மரங்களெல்லாம் பூக்களை உதிர்ந்துவிட்டன. அனுமானால் மிதிக்கப்பட்ட அந்த பர்வதமானது மதயானை மதஜலத்தைப் வெளிவிடுவதுபோல் எங்கும் தண்ணீரைப் பெருகவிட்டது.

அம்மலையில் அனுமானின் மிதி பட்டதனால் நெருக்கப்பட்ட குகைகளிலிருந்த பிராணிகள் விகாரமாய் கூச்சலிட்டன. அதிலுள்ள பாம்புகளெல்லாம் படம் எடுத்து ஆடிக்கொண்டு கோரமான விஷ அக்னியைக் கக்கி பற்களால் கற்களை கடித்துக்கொண்டன. அதில் வசித்துவந்த கல்வியாளர்கள் தம் மனைவியருடன் மிகவும் பயந்து கவலையுடன் ஆகாயத்தில் வளர்ந்து நிற்கும் அனுமானை கண்டு ஆச்சரியமடைந்தனர். அனுமான் ஆகாயமார்கமாக போகிறபடியால் வாலை நீட்டி தோள்களை இறுக்கி, இடுப்பில் அடங்கி கால்களைக் குறுக்கிக்கொண்டான். 

தான் போகவேண்டிய வழியை நிதானித்து ஆகாயத்தை பார்த்துக்கொண்டே இதயத்தில் பிராணவாயுவை தடுத்து, கால்களை பூமியில் உறுதியாய் ஊன்றிக்கொண்டு, காதுகளை உட்சுருக்கி தனது பலத்தை பிரயோகித்து மேலே புறப்படும் சமயத்தில், வானர வீரர்களைப்பார்த்து கூறுகின்றான், "ராமபிரானால் விடப்பெற்ற பாணமானது எப்படி வாயு வேகமாகப்போகுமோ, அதைப்போலவே அடியேன் லங்கைக்கு செல்வேனாக, லங்கையில் சீதையைக்காணாவிடில் இந்த வேகத்துடனே ஸ்வர்கத்திற்கு செல்வேன், அங்கேயும் சீதையைக் காணாவிடில் ராவணனைக் கட்டிக்கொண்டு வந்துவிடுவேன்" என்று சூளுரைத்து கருடனைப்போல் மிக வேகமாக ஆகாயத்தில் பறந்தான். 

அப்போது நீண்டுகொண்டிருந்த அனுமானது திண் தோள்கள் மலையின் நுனியிலிருந்து வெளிப்பட்ட இரண்டு சர்ப்பங்களைப்போல் காணப்பட்டன. அனுமான் மிகுந்து வேகத்துடன் புறப்பட்டபடியால் அம்மலையில் உள்ள மரங்கள் எல்லாம் கிளைகளை சுருக்கிக்கொண்டு நான்கு திசைகளிலும் ஓடிவிட்டன. பறக்கும் போது அனுமானது துடையின் வேகத்தால் பல மரங்கள் பிடுங்கப்பெற்று ஒரு முகூர்த்தகாலம் அனுமனை பின் தொடர்ந்து சென்றன. ஆகாயமார்கத்தில் செல்லும் அனுமானுடைய கண்கள் சிவந்து மலையில் எரியும் நெருப்புகள் போலேயும், சூரிய சந்திரர்கள் ஒருசேர வந்தாற்போலேயும் தோன்றின. ஆகாயத்தில் நிறுத்தப்பட்ட அனுமானது வாலானது, இந்திரனுடைய கொடி போல் விளங்கியது.

மேலே தன் திருவுடம்பும் கீழே கடலில் விழும் நிழலுமாக அனுமான் காற்றினால் தள்ளப்படும் கப்பலை போல இருந்தான். அனுமான் பறக்கும் போது அவனது துடையின் வேகத்தால் கடலானது வெறி பிடித்தாற்போல் பொங்கியது. கடலில் மலைபோல் எழும்பும் அழைத்துகள்களை தன்னுடைய திருமார்பில் முதியபடியே அனுமான் பறந்து சென்றான். அங்கே கடலுக்குள் வசிக்கின்ற பாம்புகள் அனுமானைக் கருடனோ என்றெண்ணி திடுக்குற்றன. பத்து யோஜனை அகலமும் முப்பது யோஜனை நீளமும் கொண்ட அனுமானது நிழல் கடல் நீரினில் மிக அழகாய் தென்பட்டது. 

இப்படி ஆகாயத்தில் சிறகுதான் பறக்கும் மலையென பிரகாசமாய் பரந்த அனுமானை அந்த சூரியனும் தகிக்கவில்லை, வாயுவும் அனுகூலமாய் வீசிற்று, ஆகாயத்தில் உலாவித்தெரிகின்ற தேவர்களும், கந்தருவர்களும், ரிஷிகளும், அனுமானது பலாதிசயத்தை புகழ்ந்து பாடினார்கள்.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.