பாசுரம் 1 : *எந்தை* - என் ஸ்வாமியான *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய *இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த *உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி *பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம் *உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன் *மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.
YathirajaSampathKumar Iyengar's Blog