Skip to main content

இராமாயணம் - சுந்தரகாண்டம் - தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்

தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்:

இப்படி அனுமான் வேகமாக செல்லும் போது சுரஸையெனும் நாக கன்னிகை ஒருத்தி தேவர்களால் சொல்லிஅனுப்பப்பட்டு அனுமானது வீரத்தை மேலும் அறிய வேண்டி அதி பயங்கர ராக்ஷச சரீரத்தை எடுத்துக்கொண்டு விகாரமாய் கோர ரூபத்தை தரித்துக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்படி வந்து, அனுமானை வழிமறித்து, "ஓ வானரனே! தேவர்கள் உன்னை எனக்கு இரையாக அளித்திருக்கிறார்கள்; ஆகையால் நான் உன்னை புசிக்கும்படி என் வாயில் வந்து புகுவாயாக" என்றாள். இதைக்கேட்ட அனுமான், தான் ராமகார்யமாக மிக அவசரமாக சென்று சீதையின் நிலையறிந்து ராமனுக்கறிவித்த பிறகு, நானே உன் வாயில் வந்து விழுகிறேன் என்று சத்யம் செய்து கூறியும், சுரஸா தேவி அனுமானை நோக்கி "வானரஸ்ரேஷ்டனே, எனது வாயில் புகாமல் நீ போக இயலாது" என்று தன் அகலமான வாயை திறந்தபடி அனுமான் முன் நின்றாள். 
அனுமான் மிகுந்த கோபம் கொண்டு பத்து யோஜனை நீளமும் பத்து யோஜனை அகலமும் தன் சரீரத்தை பெருக்கினான்; உடனே சுரசையானவள் தன் வாயை இருப்பது யோஜனை தூரம் திறந்துவிட்டாள். உடனே அனுமான் முப்பது யோஜனை வளர, சுரஸை நாற்பது யோஜனையாக வளர்ந்தாள். பின்பு அனுமான் ஐம்பது யோஜனையாகப் பெருக்க, சுரஸை அறுபதானாள். அனுமான் எழுபதாக, சுரஸை எண்பதானாள். அனுமான் தொண்ணூறாக, சுரஸை நூறு யோஜனையாக நீண்டனள். உடனே, அனுமான் தன் உடலை ஒரு கட்டைவிரல் அளவிற்கு சுருக்கி திடீரென்று அவள் வேகமாய் புகுந்து சடக்கென வெளிப்பட்டு, வெற்றிக்களிப்பில், "அம்மையே! நான் இப்போது உன் வாயில் புகுந்து வெளிவந்துவிட்டேன், இனி நான் எம் சீதா பிராட்டியை தேடிச் செல்கின்றேன்" என்றுரைக்க, சுரஸை தன் நிஜ ரூபதோடு, "ஓ வானரோத்தமா, உனது அறிவாற்றலை மெச்சினேன்; நீ செல்லும் கார்யம் சித்தியடையட்டும்!" என்று வாழ்த்தினாள். பிறகு அனுமான் சமுத்திரத்தை ஒரு பொருட்டாகக்கருதாமல் ஆகாயத்தில் கருடனென பாயத்தலைப்பட்டான்.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.