Skip to main content

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமானும் மைனாக பர்வதமும்

அனுமானும் மைனாக பர்வதமும்:

இப்படி அனுமான் வேகமாக செல்லும்போது சமுத்திர ராஜனானவன் இஷ்வாகு குல திலகரான சகர மஹாராஜாவால் தோண்டி (இதனால் தான் கடல் சாகரம் என்று அழைக்கப்படுகின்றது)  வளர்க்கப்பட்டவன் ஆனபடியால் இஷ்வாகு குலத்தில் உதித்த ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கின்ற அனுமானுக்கு உபகாரம் செய்ய எண்ணி அவனுடைய சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் மைநாகம் என்னும் பர்வதத்திடம் (மலையிடம்), "மலைக்கரசனே! ராமகார்யத்தின் பொருட்டு ஆகாய மார்கமாய்வரும் அனுமான் சற்று தங்கி இளைப்பாறும் பொருட்டு நீ உடனே நீரிலிருந்து ஆகாயம் நோக்கி மேலெழும்பி உபசரிப்பாயாக!" என்றான். அப்படியே அம்மைநாகமும் நீரிலிருந்து மேல் எழும்பி நின்ற அப்பர்வதத்தை அனுமான் மோதி அமிழ்த்திவிட்டான்.

அப்போது மிகவும் சந்தோஷித்து மைநாகம் ஒரு மானிட ரூபம் கொண்டு பர்வதத்தின் சிகரத்தில் நின்று கொண்டு அனுமானிடம், "வானரர்களில் உத்தமமான வீரா! உன்னுடைய செயல் போற்றுதலுக்குரியது. அதனால் என்னுடைய என்னுடைய சிகரங்களில் சிறிதுநேரம் இருந்து இளைப்பாறி பிறகு செல்வாயாக; ராமனுடைய முன்னோர்களால் வளர்க்கப்பட்ட சமுத்திரராஜன் உனக்கு உதவிசெய்யும் பொருட்டு என்னை ஏவினான்; ஆகையால் நீ அவனுக்கு மதிப்பளிக்கவேணும்; என்னிடம் தாராளமாயும் ஏராளமாயும் இனியவைகளாயும் உள்ள பழங்களையும் காய் கிழங்குகளையும் ஏற்றுக்கொண்டு இளைப்பாறிச் செல்வாயாக."

"மேலும் எனக்கும் உனக்கும் கூட ஒரு சம்பந்தமுண்டு. எப்படியெனில், க்ருத யுகத்தில் மலைகளுக்கெல்லாம் சிறகுகள் உண்டாயிருந்தன. அதனால் அவை பக்ஷி அரசன் கருடனைப்போல வேகமாக பல திசைகளிலும் பறந்து திரிந்ததைக்கண்டு தேவர்களும் ரிஷிகளும் முற்றுமுள்ளோரும் தமக்கு துன்பம் நேருமோ என்று அஞ்சினமையால் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் சிறகுகளை கண்டவிடத்தில் வெட்டினான். அதைக்கண்டு அஞ்சியிருந்த என்னையும் இந்திரன் துரத்திவரும்போது, மஹாத்மாவான உன்னுடைய தந்தை வாயு பகவான் என்னை இந்த உப்பு சமுத்திரத்தில் தள்ளப்பட்டு சுகமாக வசித்துவருகிறேன். அதனால், நான் உனக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டவன் ஆவேன். எனவே, நீ என் போன் மயமான சிகரங்களின் மீது சிறிது நேரம் இருந்து எங்களை களிப்படைய செய்வாயாக."   

இதைக்கேட்ட அனுமான், "பர்வதராஜனே, நான் மிகவும் சந்தோஷமடைந்து உங்களுடைய விருந்தோம்பலையும் பெற்றேன். மிகவும் அவசரமான ஒரு காரியத்திற்காக நான் சென்றுகொண்டிருக்கிறேன்; அதை நினைக்கும் பொது எனக்கு நெஞ்சம் பதறுகின்றது. மேலும் ஒருக்காலும் நடுவில் நிற்பதில்லை என்கிற உறுதியையும் மேற்கொண்டுள்ளேன்." என்று கூறி புன்னகையுடன் தன கையால் பர்வதராஜனை தட்டிக்கொடுத்தபடியே தன் பயணத்தை தொடர்ந்தான்.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.