*உபதேச இரத்னமாலை* - பாசுரம் 7 :
மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு
நின்றதுலகத்தே நிகழ்ந்து.
*மாற்றுள்ளவாழ்வார்களுக்கு* - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு
*முன்னே வந்துதித்து* - முன்பு வந்து தோன்றி
*நற்றமிழால்* - சிறந்த தமிழ் நூலினால்
*நூல்செய்து* - சிறந்த பிரபந்தங்களை அருளி
*நாட்டையுய்த்த* - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம்
*பெற்றிமையோர் என்று* - போற்றத்தகுந்த பெரியோர்கள்
*முதலாழ்வார்கள்*- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்)
*என்னும் பேரிவர்க்கு* - என்கின்ற பெயர் இவர்களுக்கு
*நின்றதுலகத்தே* - உலகத்தில் நிலைபெற்ற
*நிகழ்ந்து* - நிகழ்வு நடைபெற்றது.
Comments
Post a Comment