Skip to main content

மந்திர ஸம்ஸ்காரம் - ரஹஸ்யத்ரயம்

மந்திர ம்ஸ்காரம் - ரஹஸ்யத்ரயம்

மந்திர சம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஓர் அங்கம் ஆகும். இதில் ரஹஸ்யத்ரயம் என்று கொண்டாடப்படும் திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியன அடக்கம். திருமந்த்ரத்திற்கு  "மந்திர ராஜம்" என்ற பெயருண்டு.

திருமந்திரம்:

அஷ்டாக்ஷர (எட்டு எழுத்து உள்ளது) திருமந்திரம்: 

“ஓம் நமோ நாராயணாய”

இதில், ஓம் என்ற சொல் தான் ப்ரணவம் எனப்படுவது. இதிலிருந்து தான் அனைத்தும் ஏற்பட்டது. ப்ரணவம் தான் நமக்கும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனுக்கும் உள்ள பந்தத்தை உணர்த்துவது. இம்மந்திரம் பத்ரிகாஸ்ரமத்தில் நாராயண ரிஷியால் நரனுக்கு உபதேசிக்கப்பட்டதாகும்.

ப்ரணவமான "ஓம்" என்பதைப் பிரித்தால் அ, உ, ம கிட்டும். இங்கு 

அ -  பரமாத்மா 

உ - சேஷத்துவம் (தாஸ்யம், அடிமை செய்வது)

ம - ஜீவாத்மா

ஓம் - ஜீவாத்மா பரமாத்மாவுக்கே அடிமை செய்வது


"நமோ" என்பதைப் பிரித்தால் ந, மோ

ந - இல்லை 

மோ - எனக்கு

நமோ - எனக்காக இல்லை (பகவானுக்காக என்று இருத்தல்)


"நாராயணாய" என்பதைப் பிரித்தால் நார + அயணம் என்று கிட்டும். 

இங்கு 

நார - நீர்

அயணம் - இருப்பிடம்

நாராயணாய - நீரை இருப்பிடமாக கொண்டிருப்பவன் (பாற்கடலில் வசிப்பவன்).

ஆக, "பாற்கடலில் வசிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கே இந்த ஜீவாத்மா அடிமை" என்பதாக பொருள்படும்.


த்வயம்:

ஸ்ரீமன் நாராயண சரணௌ 

சரணம் ப்ரபத்யே 

ஸ்ரீமதே நாராயணாய நம:

இது ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தருளினார். இதன் பொருளானது, ஸ்ரீலக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியையே உபாயமாகப் (எல்லாமாக) பற்றி, பிராட்டியின் சேர்த்தியிலே அவனுக்கு கைங்கர்யம் பண்ணவேணும் என்பதே ஆகும்.


சரம ஸ்லோகம்:

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மாசுச

கீதையில் கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரம் இதுவே. இதன் பொருள் "தான் செய்யும் தர்மங்கள், கடைபிடிக்கும் தர்மங்கள் மட்டுமே மோக்ஷத்திற்கு உபாயம் என்று எண்ணிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் (எல்லாமாக) பற்றிக்கொள், நான், உன்னை, என்னை அடைவதற்கு தடைக்கல்லாக இருக்கும் எல்லா பாபங்களிருந்தும் விடுவிக்கிறேன், சோகப்படாதே!"  என்பதாகும்.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்!

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.