உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 :
*பொய்கையார்* - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார்
*பூதத்தார்* - பூதத்தாழ்வார் இரண்டாமவர்
*பேயார்* - மூன்றாவதாக தோன்றியவர்
*புகழ்மழிசை ஐயன்* - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர்
*அருள்மாறன்* - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார்
*சேரலர்கோன்* - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆறாமவர்
*துய்யப்பட்ட நாதன்* - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர்
*அன்பர்தாள்தூளி* - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர்
*நற்பாணன்* - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர்
*நன்கலியன்* - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர்
*ஈதிவர்* - (ஈது + இவர்) இதுவே இவர்களது
*தோற்றத்தடைவாமிங்கு* - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம்.
Comments
Post a Comment