கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 10 :
பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்*
குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி*
முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே*
பதவுரை:
பயன் அன்றாகிலும் - தாம் உபதேசிக்கும் ஒருவரால் எந்த வித உபகாரமும் இல்லாவிடினும்
பாங்கல்லர் ஆகிலும் - தம்முடைய உபதேசத்தைக்கேட்டு ஒரு பிரயோஜனமும் ஏற்படாமல் தம் நிலையிலேயே இருப்பவர்களாகிலும்
செயல் நன்றாகத் - தம் செயலாலே (கருணையால்) நன்றாம் படி
திருத்திப் பணி கொள்வான் - நல்வழியிலே திருத்தி பணிகொண்டு
குயில் நின்றார் - தம் (நம்மாழ்வார்) பாசுரங்களை குயில்கள் பயின்று சொல்லும்
பொழில் சூழ் - அழகிய பொழிகளால் சூழப்பட்ட
குருகூர் நம்பி - குருகூரில் அவதரித்த குணபூர்னரான ஆழ்வாரிடம்
முயல்கின்றேன் - மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றேன்
உந்தன் மொய்கழற்க்கு - தன்னை அண்டினவரின் மேல் விழுந்து காக்கும் தன்மையுடைய திருவடிகளுக்கு
அன்பையே - அன்படிமைசெய்யவே
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 11 :
அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே*
பதவுரை:
அன்பன் தன்னை - விரோதியிடத்திலும் காருண்யம் கொண்டவனான எம்பெருமானை அடைந்தவர்கட்கெல்லாம் - சரணாக பற்றினவர்களுக்கெல்லாம்
அன்பன் - கருணையை பொழிபவனாய்
தென் குருகூர் - தென் குருகூரில் அவதரித்த
நகர் நம்பிக்கு - திருநகரி குண பூரணரான ஆழ்வாரிடத்தில்
அன்பனாய் - அதி ப்ரீத்தி உடையவராய்
மதுர கவி - மதுரமான (தேனாக உதிக்கின்ற) வாக்கினை உடைய ஸ்ரீ மதுரகவியாழ்வார்
சொன்ன சொல் - அருளிச்செய்த பாசுரங்களை
நம்புவார் பதி - தனக்கு தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களுடைய இருப்பிடம்
வைகுந்தம் காண்மினே - நிச்சயம் "பரமபதம்" என்றே கண்டுகொள்ளுங்கள்.
அன்பன் - கருணையை பொழிபவனாய்
தென் குருகூர் - தென் குருகூரில் அவதரித்த
நகர் நம்பிக்கு - திருநகரி குண பூரணரான ஆழ்வாரிடத்தில்
அன்பனாய் - அதி ப்ரீத்தி உடையவராய்
மதுர கவி - மதுரமான (தேனாக உதிக்கின்ற) வாக்கினை உடைய ஸ்ரீ மதுரகவியாழ்வார்
சொன்ன சொல் - அருளிச்செய்த பாசுரங்களை
நம்புவார் பதி - தனக்கு தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களுடைய இருப்பிடம்
வைகுந்தம் காண்மினே - நிச்சயம் "பரமபதம்" என்றே கண்டுகொள்ளுங்கள்.
Comments
Post a Comment