Skip to main content

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 3, 4 & 5

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 3 :

திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை*
கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்*
பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே*

திரிதந்தாகிலும் - தேவுமற்றறியேன் என்று இருந்தாலும் (ஆழ்வாரைத்தவிர வேறு எந்த தெய்வத்தை பற்றியும் அறிய வேண்டாம் என்று இருந்தாலும்)
தேவ பிரானுடை - எம்பெருமானே என்மேல் கடாக்ஷித்தருளி அவனுடைய
கரிய கோலத்திரு உரு - உகப்பான கரிய கார்முகில் போன்ற சேவையை தன் தேவிமார்களுக்கும் ஆழ்வாருக்கு சாதித்தபடியே
காண்பான் நான் - அடியேனுக்கும் சாதிக்கப்பெற்றேன்  
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு - பெருமையும் புகழும் மிக்க திருக்குருகூரில் அவதரித்த சிறந்த கல்யாண குணங்களையுடைய ஆழ்வாருக்கே  
ஆள் உரியனாய் அடியேன் - உரிய அடியனாய் இருக்கப்பெற்றது 
பெற்ற நன்மையே - அடியேன் பெற்ற பெரும் பேறு

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 4 :

நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்*
புன்மையாகக்* கருதுவர் ஆதலின்*
அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும்
தன்மையான்* சடகோபன் என் நம்பியே*

நன்மையால் மிக்க - ஆத்ம குணங்களோடு அறநெறியில் நிற்பவர்கள் 
நான்மறையாளர்கள் - அவ்வறநெறியில் நிற்க ஊக்குவிக்கின்ற வேதங்களை ஆதாரமாக கொண்டவர்கள் 
புன்மையாகக் - தாழ்மையாகக் 
கருதுவர் - எண்ணுவர் 
ஆதலின் - இப்படி இவர்கள் எண்ணும் காரணத்தினாலேயே
அன்னையாய் அத்தனாய் - (ஆழ்வார்) அடியேனுக்கு தந்தையும் தாயும் ஆகி 
என்னை ஆண்டிடும் - "எவரும் இவனை காப்பாற்றுவோரில்லை" என்று அடியேனை ஆட்கொண்டு 
தன்மையான் - போக்கிடம் அற்றவர்களுக்கு புகலிடம் தருவதையே தன்னுடைய ஸ்வபாவமாக கொண்ட 
சடகோபன் - சடம் எனும் வாயுவை தன் கால்களால் எட்டித்தள்ளி கோபித்த ஸ்வாமி நம்மாழ்வாரே 
என் நம்பியே - அடியேனுக்கு நாதனும் ஸ்வாமியும் ஆவார்.

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 5 :

நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன்னெலாம்*
செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன் சதிர்த்தேன் இன்றே

நம்பினேன் - நான் எனதென்று திடமாக கொண்டேன் 
பிறர் - சித்து அசித்துக்களுக்கு நாதனாக உள்ள நாராயணனே 
நன்பொருள் தன்னையும் - கௌஸ்துபம் போன்று விரும்பி ஏற்றுக்கொள்ளத்தக்க ஆத்மாவை 
நம்பினேன் - நிலையானதென்று கொண்டேன் 
மடவாரையும் - நிலையில்லாத பெண்ணின்பம் முதலானவற்றை 
முன்னெலாம் - இதுவரை அடியேன் கழித்த காலத்தில் எல்லாம் 
செம்பொன் மாடத் - செம்பொன் மாடங்களை வைத்தாற்போல் வரிசையான மாடங்களை உடைய 
திருக்குருகூர் நம்பிக்கு - திருக்குருகூரில் அவதரித்த நிறைந்த குணங்களை உடைய ஆழ்வார்க்கு 
அன்பனாய் அடியேன் - அன்புக்குரியோனாயும் அடியோனாயும் 
சதிர்த்தேன் இன்றே - பேறு பெற்றேன் இன்று.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.