Skip to main content

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 6, 7, 8 & 9

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 6 :

இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்*
குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே*

பதவுரை:

இன்று தொட்டும் - இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே 
எழுமையும் - இனிமேல் உள்ள காலமெல்லாம் 
எம்பிரான் - அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான 
நின்று தன் புகழ் - எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே
ஏத்த அருளினான் - நிலைத்திருக்கும்படி அருளினான் 
குன்ற மாடத் - சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த  
திருக்குருகூர் நம்பி - திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர்
என்றும் என்னை இகழ்விலன் - எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது  காப்போன்  
காண்மினே - காணுங்கள்

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 7 :

கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்*
பண்டை வல்வினை* பாற்றி அருளினான்*
எண் திசையும்* அறிய இயம்புகேன்*
ஒண் தமிழ்* சடகோபன் அருளையே*

பதவுரை:

கண்டு கொண்டென்னைக் - (கண்டு + கொண்டு + என்னை) என் தாழ்மையான நிலையைக்கண்டும்  கூட என்னைக் கைக்கொண்டு 
காரி மாறப் பிரான் - காரிமாறனாகிய பேருபகாரனான ஆழ்வார்
பண்டை வல்வினை - அனுபவித்துக் கழியாத என்னுடைய பழவினைகளை 
பாற்றி அருளினான் - முழுமையாக அழிந்துபோகும்படி செய்தருளினார்
எண் திசையும் - எல்லா திசைகளில் (எட்டு திக்கும்) உள்ளோரும்
அறிய இயம்புகேன் - அறிந்துகொள்ளும்படி ஆழ்வாரது பெருமைகளை சொல்லித் திரிவேன்  
ஒண் தமிழ் - ஒன்றிய தமிழ் மாலையை அருளிய 
சடகோபன் - சடத்தைக் கோபித்த எம் ஆழ்வாரது 
அருளையே - கருணையே

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 8 :

அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*

பதவுரை:

அருள் கொண்டாடும் - எம்பெருமானுடைய அருளையே கொண்டாடிக் கொண்டிருக்கிறன்ற அடியவர் - இவ்வாழ்வாரைப்போல உள்ள அடியோர்கள்
இன்புற - மகிழ்ந்திருக்க வேண்டி 
அருளினான் - திருவாய்மொழியை அருளி  
அவ்வருமறையின் பொருள் - மிகவும் அரிதான வேதத்தின் அர்த்தத்தை 
அருள் கொண்டு - எம்பெருமானின் அருளையே துணையாகக்கொண்டு 
ஆயிரம் இன்தமிழ் - இனிய தமிழால் ஆயிரம் பாசுரமாக 
பாடினான் - பாடின அடியாராகிய ஆழ்வாருடைய 
அருள் கண்டீர் - கருணையை கண்டீர்கள் என்றால் 
இவ்வுலகினில் மிக்கதே - இவ்வுலகைவிட பெரியதே ஆகும்.

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 9:

மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆள்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*

பதவுரை:

மிக்க வேதியர் - வேதாந்தமான உபநிஷத்தையே நெறியாக கொண்டவர்களுடைய 
வேதத்தின் உட்பொருள் - வேதாந்தத்தின் உட்பொருளான பாகவத பரிமளிப்பை (சேஷத்வம்)
நிற்கப் பாடி - எப்போதும் நிலைத்திருக்கும் படி பாடி 
என் நெஞ்சுள் - அடியேனுடைய நெஞ்சினுள்ளே 
நிறுத்தினான் - பொருத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் - எல்லா மேன்மைகளை நிறைந்திருக்கின்ற சடகோபனான  
என் நம்பிக்கு - ஸ்வாமி நம்மாழ்வார் எனும் குணபூர்ணருக்கு 
ஆள் புக்க காதல் - அடிமை செய்ய வேண்டும் என்கிற அவா (ப்ரேமை)
அடிமைப் பயன் அன்றே - இன்ப பயன் தரும் அடிமைத்தனம் அன்றோ?

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.