Skip to main content

உபதேச இரத்னமாலை - பதவுரை

 ஸ்ரீ: 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உபதேச இரத்னமாலை
பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 :

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோமி யாம்.

அந்தமிழால் - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால் 
நற்கலைகள் - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை 
ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள் 
இந்தவுலகிலிருள்நீங்க - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க  வந்துதித்த - வந்து அவதாரம் செய்த 
மாதங்கள் நாள்கள்தமை - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும் 
மண்ணுலகோர் - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்  
தாமறிய - அவர்கள் தாம் அறிய 
ஈதென்று - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று 
சொல்லுவோம்யாம் - நாம் கூறுவோம்

உபதேச இரத்னமாலை  - பாசுரம் 6 :

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை 
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும் 
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால்.

 ஐப்பசியில் - ஐப்பசி மாதத்தில் 
 ஓணம் அவிட்டம் சதயம் இவை - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள்  
 ஒப்பிலவா நாள்கள் - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்)
 உலகத்தீர் - உலகிலுள்ளீர்களே!  
 எப்புவியும் பேசுபுகழ் - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த 
 பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் - முதல் ஆழ்வார்களாகிய 
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் 
 தேசுடனே தோன்று சிறப்பால் - சிறந்த தேஜஸுடனே / புகழுடன் 
திருவவதாரம் செய்தமையால்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 :

மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து 
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர் 
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு 
நின்றதுலகத்தே நிகழ்ந்து.

 மாற்றுள்ளவாழ்வார்களுக்கு - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு  
 முன்னே வந்துதித்து - முன்பு வந்து தோன்றி  
 நற்றமிழால் - சிறந்த தமிழ் நூலினால் 
 நூல்செய்து - சிறந்த பிரபந்தங்களை அருளி 
 நாட்டையுய்த்த - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம் 
 பெற்றிமையோர் என்று - போற்றத்தகுந்த பெரியோர்கள்
முதலாழ்வார்கள்- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்) 
என்னும் பேரிவர்க்கு - என்கின்ற பெயர் இவர்களுக்கு  நின்றதுலகத்தே  - உலகத்தில் நிலைபெற்ற
நிகழ்ந்து - நிகழ்வு நடைபெற்றது.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 8 :

பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்
 
 பேதைநெஞ்சே! - ஞானமில்லாத மனமே! 
 இன்றைப்பெருமை - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று 
 அறிந்திலையோ! - அறிந்துகிள்ளவில்லையோ? 
 ஏது பெருமை இன்றைக்கென்றென்னில்! - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ? 
ஓதுகின்றேன் - சொல்லுகின்றேன் 
 வாய்த்தபுகழ் மங்கையர்கோன் - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார்  மாநிலத்தில் - இப்பூவுலகில் 
 வந்துதித்த - வந்து அவதாரம் செய்தருளிய
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண் - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.

உபதேச இரத்னமாலை  பாசுரம் 9 :

மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய

கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து


 மாறன் பணித்த - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 
 தமிழ்மறைக்கு - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும் 
 மங்கையர்கோன் - திருமங்கைஆழ்வார் 
 ஆறங்கம் கூற - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய 
 அவதரித்த - திரு அவதாரம் செய்த 
 வீறுடைய - பெருமை உடைய 
 கார்த்திகையில் கார்த்திகைநாள் - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள் 
 இன்றென்று - இன்று என்று 
 காதலிப்பார் - கொண்டாடுபவர்களுடைய  
 வாய்த்த மலர்த்தாள்கள் - திருவடிகளை 
 நெஞ்சே! வாழ்த்து - நெஞ்சமே உகந்து போற்று.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 10 : 

கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று 
காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால் 
ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் 
கற்றதிற்பின் கொண்டாடும் நாள்


 கார்த்திகையுரோஹிணி நாள் - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள் 
 காண்மினின்று - இன்று கண்டுகொள்ளுங்கள் 
 காசினியீர் - உலகத்தீரே!  
 வாய்த்த புகழ்ப்பாணர் - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் 
 வந்துதிப்பால் - திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு 
 ஆத்தியர்கள் - ஆஸ்திகர்கள் 
அன்புடனே தான் - ப்ரியமுடன் 
 அமலனாதிபிரான் கற்றதிற்பின் - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே 
கொண்டாடும் நாள் - ஆராதித்து கொண்டாடும் நாள்

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.