Skip to main content

உபதேச இரத்னமாலை - பதவுரை

  ஸ்ரீ: 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உபதேச இரத்னமாலை
பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 :


மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்.

மன்னிய சீர் - மிகவும் சிறப்பு பொருந்திய 
மார்கழியில் கேட்டை இன்று - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று
மாநிலத்தீர் - உலகத்தீர்
என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன் - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன் 
துன்னுபுகழ் - மிக்க புகழையுடைய 
மாமறையோன் - பரம வைஷ்ணவரான (வைதீகரான) 
தொண்டரடிப்பொடியாழ்வார்  பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால் 
நான்மறையோர் கொண்டாடும் நாள் - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள்

உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 :

தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்

தையில் மகம் இன்று - இன்றையதினம் தை மாதத்தில் வரும் மகம் (நக்ஷத்திரம்) நாளாகும்
தாரணியீர்! - உலகோர்களே
ஏற்றம் இந்த தையில் மகத்துக்கு - என்ன பெருமை இந்த தையில் மகத்திற்கு என்று
சாற்றுகின்றேன் - கூறுகின்றேன் 
துய்யமதி பெற்ற மழிசைப்பிரான் - பரிசுத்தமான ஞானமுடைய திருமழிசையாழ்வார்
பிறந்த நாள் என்று - திருவவதாரம் செய்த நாள் என்று 
நற்றவர்கள் - பெரும் தவசீலர்கள் 
கொண்டாடும் நாள் - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :

மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில்    -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்

மாசிபுனர்பூசம் காண்மினின்று - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். 
மண்ணுலகீர் - உலகோர்களே
தேசித் திவசத்துக் கேதென்னில் - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால் 
பேசுகின்றேன் - சொல்லுகின்றேன்
கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான 
குலசேகரன் - ஸ்வாமி குலசேகராழ்வார்
பிறப்பால் - திருவவதாரத்தினால் 
நல்லவர்கள் - சாதுக்கள் 
கொண்டாடும் நாள் - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்

ஏரார் - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த 
வைகாசி விசாகத்தின் - வைகாசிமாதத்து விசாகநாளின் 
ஏற்றத்தை - பெருமையை 
பாரோரறியப் - உலகோர்கள் அறிந்துகொள்ள
பகர்கின்றேன் - சொல்லுகின்றேன் 
சீராரும் வேதம் - சீர்நிறைந்த வேதத்தை 
தமிழ்செய்த மெய்யன் - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த 
எழில் குருகை நாதன் - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார் 
அவதரித்த நாள் - அவதாரம் செய்த நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 :

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்

உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள் - வைகாசி மாதத்து விசாகத்துக்கு நாளுக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ? 
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் - ஸ்வாமி நம்மாழ்வாருக்கொப்பான ஒரு ஆழ்வார் உண்டோ? 
உண்டோ திருவாய்மொழிக்கொப்பு? - திருவாய்மொழிக்கு ஒப்பான பிரபந்தம் ஒன்று உண்டோ? 
தென் குருகைக்குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்? - இந்த உலகில் தென் குருகையென்னும் (ஆழ்வார் திருநகரி) நகருக்கொப்பானதொரு நகர் உண்டோ?

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.