Skip to main content

திருப்பாவை பாசுரம் 1 பதவுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருப்பாவை - பாசுரம் 1:

மார்கழித்‌ திங்கள்‌ மதி நிறைந்த நன்னாளால்‌
 
நீராடப்போதுவீர்‌ போதுமினோ நேரிழையீர்‌!

சீர்‌ மல்கும்‌ ஆய்ப்பாடிச்‌ செல்வச்‌ சிறுமீர்காள்‌!

கூர்‌ வேல்‌ கொடுந்தொழிலன்‌ நந்தகோபன்‌ குமரன்‌

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்‌

கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்‌ மதியம்‌ போல்‌ முகத்தான்‌

 நாராயணனே நமக்கே பறை தருவான்‌

பாரோர்‌ புகழப்‌ படிந்தேலோரெம்பாவாய்‌.

பதவுரை:

மார்கழித்‌திங்கள்‌- (பரம வைஷ்ணவமான) மார்கழி மாதமாகவும்‌, 

மதிநிறைந்த நல்‌ நாள்‌- சந்திரன்‌ பூர்ணமாயுள்ள அழகிய நாளாகவும்‌ இருக்கிறது;

நீராட போதுவீர்‌- கண்ணணுடைய வைபவங்களிலே இஷ்டமுடையவர்கள்

போதுமின் -  வாருங்கள்‌;

நேர்‌ இழையீர்‌- அழகிய  ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!

சீர்‌ மல்கும்‌-செல்வம்‌ நிறைந்துள்ள,

ஆய்ப்பாடி-திருவாய்ப்பாடியிலுள்ள

செல்வச்‌ சிறுமீர்காள்‌- (பகவத்‌ ஸம்பந்தமாகிற) செல்வத்தையும்‌, இளம்‌ பருவத்தையுமுடைய பெண்களே! 

கூர்வேல்‌-கூரிய வேலை உடையவரும்‌,

கொடும்‌ தொழிலன்‌-(கண்ணனுக்கு தீங்கு செய்யவரும்‌ சிறு ஜந்துக்கள்‌ விஷயத்திலும்‌) கொடுமையான கோபத்தை உடையவருமான,

 நந்தகோபன்‌ - ஸ்ரீநந்தகோபருடைய,

குமரன்‌-பிள்ளையாய்‌,

ஏர்‌ ஆர்ந்த கண்ணி-அழகு நிறைந்த திருக்கண்களை உடையவளான,

 யசோதை-யசோதைப்‌ பிராட்டிக்கு, 

இளம்‌ சிங்கம்‌-சிங்கக்‌ குட்டிபோல்‌ இருக்குமவனாய்‌,

கார்‌-கரியமேகம் போன்ற,
 
மேனி-திருமேனியையும்‌, 

செம்‌ கண்‌-சிவந்த கண்களையும்‌, 

கதிர்‌ மதியம்‌ போல்‌ முகத்தான்‌-சூரியனையும்‌, சந்திரனையும்‌ போன்ற திருமுகத்‌ தையும்‌ உடையவனான,

நாராயணனே- ஸ்ரீமந்நாராயணனே

நமக்கே - நமக்கு,

பறை-நம்முடைய விருப்பத்தை,
 
தருவான்‌- நிறைவேற்றிக் கொடுப்பவன்; 

பாரோர்‌- (என்று) இவ்வுலகிலுள்ளோர்‌,

புகழ--கொண்டாடும் படி,
 
படிந்து-இந்நோன்பிலே ஈடுபட வேண்டும்

எம்‌பாவாய்‌ - எம்பிள்ளாய்.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.