*உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 :*
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்
*பதவுரை:*
*உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்* - வைகாசி மாதத்து விசாகத்துக்கு நாளுக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ?
*உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்* - ஸ்வாமி நம்மாழ்வாருக்கொப்பான ஒரு ஆழ்வார் உண்டோ?
*உண்டோ திருவாய்மொழிக்கொப்பு?* - திருவாய்மொழிக்கு ஒப்பான பிரபந்தம் ஒன்று உண்டோ?
*தென் குருகைக்குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?* - இந்த உலகில் தென் குருகையென்னும் (ஆழ்வார் திருநகரி) நகருக்கொப்பானதொரு நகர் உண்டோ?
Comments
Post a Comment