பாசுரம் 8 :
*பேதைநெஞ்சே!* - ஞானமில்லாத மனமே!
*இன்றைப்பெருமை* - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று
*அறிந்திலையோ!* - அறிந்துகிள்ளவில்லையோ?
*ஏது பெருமை* *இன்றைக்கென்றென்னில்!* - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ?
*ஓதுகின்றேன்* - சொல்லுகின்றேன்
*வாய்த்தபுகழ் மங்கையர்கோன்* - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார்
*மாநிலத்தில்* - இப்பூவுலகில்
*வந்துதித்த* - வந்து அவதாரம் செய்தருளிய
*கார்த்திகையில்* *கார்த்திகைநாள் காண்* - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.
Comments
Post a Comment