பாசுரம்:
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பா ரீரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்குந் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
பதவுரை:
வங்கம் கடல் - கப்பல்களையுடைய திருப்பாற்கடலை
கடைந்த-(தேவர்களுக்காகக்) கடைந்த,
மாதவனை- ஸ்ரீய:பதியான
கேசவனை - கண்ணபிரானை
திங்கள் திருமுகத்து சே இழையார் - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று- அடைந்து
இறைஞ்சி - வணங்கி
அங்கு- அத்திருவாய்ப்பாடி
யில்
அப் பறை கொண்ட ஆற்றை-பிரஸித்தமான (தங்கள்)
புருஷார்த்தத்தைப்பெற்ற வருத்தாந்தத்தை
அணிபுதுவை-
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த
பை கமலம் தண் தெரியல்
பட்டர்பிரான் - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகளான
கோதை-ஆண்டாள்.
சொன்ன- அருளிச்செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்கவேண்டிய தமிழ்மாலையாகிய இம்முப்பது பாசுரங்களையும்
தப்பாமே - தப்பாமல்
இங்கு - இந்நிலத்தில்
இ பரிசு-இவ்விதமாக
உரைப்பார்-ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்-
பெரியமலைபோன்ற நான்கு திருத் தோள்களையுடையனும்
செம்கண் திருமுகத்து- சிவந்த திருமுகத்தையுடையவனும்
செல்வம்-ஐச்வர்யத்தையுடையனும்
திருமாலால்- ஸ்ரீமானுமான எம்பெருமானாலே
எங்கும் - எல்லாவிடத்தும்
திருஅருள் பெற்று—(அவனுடைய) க்ருபையைப்பெற்று
இன்புறுவர்- ஆனந்தமுறுவர்
Comments
Post a Comment