Skip to main content

Posts

Showing posts from January, 2023

திருப்பாவை பாசுரம் 30 - பதவுரை

பாசுரம்: வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பா ரீரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்குந் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். பதவுரை: வங்கம் கடல் - கப்பல்களையுடைய திருப்பாற்கடலை கடைந்த-(தேவர்களுக்காகக்) கடைந்த,  மாதவனை- ஸ்ரீய:பதியான கேசவனை - கண்ணபிரானை திங்கள் திருமுகத்து சே இழையார் - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள் சென்று- அடைந்து இறைஞ்சி - வணங்கி அங்கு- அத்திருவாய்ப்பாடி யில் அப் பறை கொண்ட ஆற்றை-பிரஸித்தமான (தங்கள்) புருஷார்த்தத்தைப்பெற்ற வருத்தாந்தத்தை அணிபுதுவை- அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த பை கமலம் தண் தெரியல் பட்டர்பிரான் - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகளான கோதை-ஆண்டாள்.  சொன்ன- அருளிச்செய்த சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்கவேண்டிய தமிழ்மாலையாகிய இம்முப்பது பாசுர...

திருப்பாவை பாசுரம் 29 - பதவுரை

பாசுரம்: சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த் துண்ணுங் குலத்திற் பிறந்த நீ குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பதவுரை: கோவிந்தா-கண்ணபிரானே! சிற்றஞ்சிறு காலே-உஷ: (அதிகாலையிலே) காலத்திலே  வந்து-(இங்கு) வந்து உன்னை சேவித்து- உன்னை வணங்கி உன் பொன்தாமரை அடி போற்றும் பொருள் -உனது அழகிய திருவடித்தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பலனை கேளாய் -கேட்டருளவேணும் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ-பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக் குலத்தில் பிறந்த நீ எங்களை - எங்களிடத்தில் குற்றேவல்- அந்தரங்க கைங்கரியத்தை கொள்ளாமல் போகாது - திருவுள்ளம் பற்றா தொழியவொண்ணாது இற்றைப் பறைகொள்வான் அன்று காண் - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம் எற்றைக்கும்-காலமுள்ளவளவும் ஏழ் ஏழ் பிறவிக்கும் - எவ்வளவு பிறவியெடுத்தபோதிலும் உன் தன்னோடு-உன்னோடே உற்றோமே ஆவோம் - உறவு உடைய...

திருப்பாவை பாசுரம் 28 - பதவுரை

பாசுரம்: கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா வுன்றன்னோ டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியா(து) அறியாத பிள்ளைகளோ மன்பினாலுன் றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். பதவுரை: குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா—ஒரு குறையும் இல்லாதவனான கோவிந்தனே!  யாம் -நாங்கள் கறவைகள் பின் சென்று-பசுக்களின் பின்னே போய் கானம் சேர்ந்து-காடு சேர்ந்து உண்போம்-உண்டு திரிவோம் அறிவு ஒன்றும் இல்லாத-சிறிதும் அறிவற்ற ஆய்க்குலத்து-இடைக் குலத்தில் உன் தன்னை-உன்னை பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்-பிறக்கப் பெறுவதற்குத்தக்க புண்ணியமுடையவர்களாய் இராநின்றோம் இறைவா-எம்பிரானே!  உன் தன்னோடு உறவு-உன்னோடு (எங்களுக்குள்ள)உறவானது இங்கு நமக்கு ஒழிக்க ஒழியாது—இங்கு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க ஒழியமாட்டாது அறியாத பிள்ளைகளோம்-(உலகவழக்கொன்றும்) அறியாத சிறுபெண்களானநாங்கள்   உன்தன்னை- உன்னை அன்பினால் - பிரீதியினாலே சிறு பேர் அழைத்தனவும் - சிறிய பேராலே அழைத்ததைக் குறித்தும் நீ -(ஆச்ரிதவத...

திருப்பாவை பாசுரம் 27 - பதவுரை

பாசுரம்: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: கூடாரை-தன் அடிபணியாதாரை,  வெல்லும் சீர்-ஜயிக்கின்ற குணங்களையுடைய கோவிந்தா-கோவிந்தனே! உன் தன்னை-உன்னை பாடி-வாயாரப்பாடி பறை கொண்டு- பறையைப் பெற்று யாம் பெறு சம்மானம் - (மேலும்) நாங்கள் அடையவிருக்கும் பரிசாவது நாடு புகழும் பரிசினால்- ஊரார் புகழும்படியாக சூடகம்—(கைக்கு ஆபரணமான) சூடகங்களும் தோள்வளை - தோள்வளைகளும் தோடு- (காதுக்கு ஆபரணமான) தோடுகளும் செவிப்பூ — கர்ண புஷ்பமும் பாடகம்-(காலுக்கு ஆபரணமான) பாதகடகமும் என்று அனைய பல் கலனும்-என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களையும் யாம் நன்றாக அணிவோம்-(உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்துகொள்வோம் ஆடை-(உங்களால் அணிவிக்கப்ட்ட) ஆடைகளை உடுப்போம்- உடுத்திக்கொள்வோம் அதன் பின்னே -அதற்குப் பிறகு பால் சோறு - பாலால...

திருப்பாவை பாசுரம் 26 - பதவுரை

பாசுரம்: மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே Q < திருப்பாவை-இருபத்தாறாம் பாட்டு. ||| திருப்பாவை போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலி னிலையா யருளேலோ ரெம்பாவாய். பதவுரை: மாலே-(அடியாரிடத்தில்) அன்புடையவனே! மணி வண்ணா-நீலரத்னம்போன்ற வடிவையுடையவனே! ஆலின் இலையாய்-(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் கண்வளர்ந்தவனே!  மார்கழி நீராடுவான்-மார்கழி நீராட்டத்திற்காக மேலையார்-முன்னோர்கள் செய்வனகள்-செய்யும் கிரியைகளுக்கு வேண்டுவன-வேண்டும் உபகரணங்களை கேட்டியேல் -கேட்டாயாகில் (அவற்றைச் சொல்லுகிறோம்;)  ஞாலத்தை எல்லாம்-பூமிமுழுவதும் நடுங்க-நடுங்கும்படி முரல்வன-ஒலிக்கக்கூடிய பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே-பால்போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம்போன்ற சங்கங்கள் - சங்கங்களையும் போய் பாடு உடையன-மிகவும் இடமுடையனவாய் சால பெரு-மிகவும் பெரியனவான பறை-பறைகளையும் பல்லாண்டு இசைப்பார்- திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் கோலம் விளக்கு-மங்கள தீப...

திருப்பாவை பாசுரம் 25 - பதவுரை

பாசுரம்: ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ஒருத்திமகனாய் நெருப்பென்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமுஞ் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: ஒருத்தி-தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு மகன் ஆய்-பிள்ளையாய் பிறந்து-தோன்றி ஓர் இரவில்- (அவதரித்த அந்த) ஒப்பற்ற இரவிலேயே ஒருத்தி-யசோதைப் பிராட்டியாகிய ஒருத்தியுடைய மகன் ஆய்—பிள்ளையாக ஆகி ஒளித் துவளர-ஒளிந்திருந்து வளரும் காலத்தில் தான்--கம்ஸனாகிறவன் தரிக்கிலான் ஆகி-(ஒளிந்து வளருவதையும்) பொறுக்கமாட்டாதவனாய் தீங்கு நினைந்த- (இவனைக் கொல்லவேணும் என்னும்) தீச்செயலை நினைத்த கஞ்சன் - கம்ஸனுடைய கருத்தை - எண்ணத்தை பிழைப்பித்து-வீணாக்கி (கஞ்சன்) வயிற்றில் - அக்கம்ஸனுடைய வயிற்றில் நெருப்பு என்ன நின்ற-'நெருப்பு' என்னும்படி நின்ற நெடுமாலே-ஸர்வாதிகனே! உன்னை-உன்னிடத்தில் அருத்தித்து வந்தோம்-(எங்களுக்கு வேண்டியவற்றை) யாசித்துக்கொண்டு வந்தோம்;  பறை தருதி ஆகில்-எங்களுடைய விருப்ப...

திருப்பாவை பாசுரம் 24 - பதவுரை

பாசுரம்: அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். பதவுரை: அன்று—(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியினால் வருந்திய) அக்காலத்தில்  இவ்உலகம்-இந்த உலகங்களை அளந்தாய்-(இரண்டடிகளால்) அளந்தருளியவனே! அடி—(உன்னுடைய அந்தத்) திருவடிகள்  போற்றி—பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அங்கு-இராவணன் இருக்குமிடத்தில்  சென்று-எழுந்தருளி தென் இலங்கை-(அவன் நகராகிய) அழகிய இலங்கையை செற்றாய்-அழித்தவனே! திறல்-(உன்னுடைய) பலம் போற்றி-பல்லாண்டு வாழ்க! சகடம்-சகடாசுரனானவன்  பொன்ற-அழிந்துபோகும்படி உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத்தவனே!  புகழ்—(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி - நீடூழி வாழ்க கன்று- கன்றாய் நின்ற வத்ஸாஸுரனை குணிலா-எறிதடியாகக் கொண்டு எறிந்தாய்-(விளங்கனியாய் நின்ற அஸுரன்மீது) எறிந்தருளியவனே! கழல்-(அப்போது மடக்கிநின்ற) உன் திருவடிகள் போற்றி - நீட...

திருப்பாவை பாசுரம் 23 - பதவுரை

பாசுரம்:   மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணாவுன் கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பதவுரை: மாரி - மழைகாலத்தில் மலைமுழஞ்சில் - மலைக் குகையொன்றில் மன்னிகிடந்து -- (பேடையோடு ஒன்றாகப்) பொருந்திக்கிடந்து உறங்கும் - தூங்குகின்ற  சீரிய சிங்கம்-(வீர்யமாகிய) சீர்மையை உடைய சிங்கம் அறிவுற்று- உணர்ந்தெழுந்து தீ விழித்து- நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து வேரி மயிர் - பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள் பொங்க- எழும்படி எப்பாடும் - எல்லாப் பக்கங்களிலும் பேர்ந்து - அசைந்து உதறி - (தேஹத்தை) உதறி மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து முழங்கி-கர்ஜனை செய்து புறப்பட்டு- வெளிப்புறப்பட்டு போதரும் ஆ போலே - வருகிறது போல் பூவை பூ வண்ணா-காயாம்பூ போல் நிறத்தையுடையவனே!  நீ-நீ உன் கோயில் நின்று- உன்னுடைய திருக்கோயிலிலிருந்து இங்ஙனே போந்தருளி - இவ்விடத்திலே எழுந்த...

திருப்பாவை பாசுரம் 22 - பதவுரை

  பாசுரம்: அங்கண்மா ஞாலத் தரச ரபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: அம் கண் மா ஞாலத்து அரசர் - அழகியதாய், இடமுடையதாய், பெரிதாயுள்ள பூமியில் (ஆண்டுவரும்) அரசர்கள் அபிமான பங்கமாய் வந்து-(தங்களுடைய) அஹங்காரம் குலைந்து வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-உன் சிங்காசனத்தின் கீழே சங்கம் இருப்பார்போல்-திரளாகக் கூடி இருப்பதைப்போல் வந்து-(நாங்களும் நீயிருக்குமிடம்) வந்து தலைப்பெய்தோம்-அணுகினோம் கிங்கிணி வாய்ச்செய்த-கிங்கிணியின் வாய்போலே பாதிமலர்ந்த தாமரை பூ போலே- தாமரைப் பூவைப்போலே செம் கண் - சிவந்திருக்கும்  திருக்கண்கள் சிறுச்சிறிதே - சிறிது சிறிதாக எம்மேல் விழியாவோ -  (அடியாரான) எங்கள்மேல் விழிக்கமாட்டாவோ? திங்களும் ஆதித்தியனும்-சந்திரனும் ஸூர்யனும் எழுந்தால் போல்-உதித்தாற்போல் அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய கண்கள் இரண்டாலும் எங்கள் மேல ...

திருப்பாவை பாசுரம் 21 - பதவுரை

பாசுரம்: ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: ஏற்ற கலங்கள்—(தானாகச் சுரக்கும்) பாலை ஏற்றுக்கொள்ள இடப்பட்ட பாத்திரங்களெல்லாம் எதிர்பொங்கி-எதிரே பொங்கி மீது அளிப்ப-மேலே வழியும்படியாக மாற்றாதே-இடைவிடாமல் பால் சொரியும் - பாலைப் பொழியும்படியான வள்ளல்-வண்மையையுடைய பெரும் பசுக்கள் - பெரிய பசுக்களை  ஆற்ற படைத்தான் மகனே - விசேஷமாக உடையவரான நந்தகோபருக்குப் பிள்ளையானவனே!  அறிவுறாய்- திருப்பள்ளியுணரவேணும் ஊற்றம் உடையாய்-(மேலான ப்ரமாணமாகிற வேதத்தில் சொல்லப்படுகையாகிற) திண்மையை உடையவனே!  பெரியாய்-(அந்த வேதத்தாலும் அறியப்படாத) பெருமையை உடையவனே!  உலகினில்-இவ்வுலகத்தில் தோற்றம் ஆய் நின்ற-(ஸகல சேதனருடைய கண்ணுக்கும்) தோன்றி நின்ற சுடரே-தேஜோ ரூபியானவனே!  துயில் எழாய்- துயிலுணர்வாயாக மாற்றார்-உன் னுடைய எதிரிகள் உனக்கு வலி தொ...

திருப்பாவை பாசுரம் 20 - பதவுரை

பாசுரம்: முப்பத்து மூவ ரமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். பதவுரை: முப்பத்து மூவர் அமரர்க்கு-முப்பத்து முக்கோடி தேவர்கட்கு முன்சென்று- (இடர் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி கப்பம்-(அவர்களுடைய)நடுக்கத்தை தவிர்க்கும் - போக்கியருளவல்ல கலியே-பலத்தையுடைய கண்ணபிரானே துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்திராய் செப்பம் உடையாய்(ஆச்ரிதர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில்) நேர்மை உடையவனே;  திறல் உடையாய்- (ஆச்ரித விரோதிகளை அழியச்செய்யவல்ல) பலத்தை உடையவனே!  செற்றார்க்கு-எதிரிகளுக்கு வெப்பம்-துக்கத்தை கொடுக்கும்-தரும்படியான விமலா - பரிசுத்தனே! துயில எழாய் செப்பு அன்ன-பொற்கலசம் போன்ற  மென்முலை- மிருதுவான முலைகளையும் செவ்வாய்-சிவந்த வாயையும் சிறு மருங்குல் - நுண்ணிய இடையையுமுடைய நப்பின்னை நங்காய் - நப்பின்னை பிராட்டியே! திருவே-பெரிய பிராட்டியை ஒத...

திருப்பாவை பாசுரம் 19 - பதவுரை

பாசுரம்: குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதுந் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். பதவுரை: குத்து விளக்கு-நிலைவிளக்கானது எரிய- எரியா நிற்க கோடு கால் கட்டில் மேல்-யானைத் தந்தங்களால் செய்த கால்களையுடைய கட்டிலிலே மெத்தென்ற - மெத்தென்றிருக்கும் பஞ்ச சயனத்தின் மேல் ஏறி-பஞ்சினாலான படுக்கையின் மீது ஏறி கொத்து அலர் பூ குழல்-கொத்துக் கொத்தாக மலரும் பூக்களை அணிந்த குழலையுடைய நப்பின்னை- நப்பின்னைப் பிராட்டியுடைய கொங்கைமேல் - திருமுலைத் தடங்களின்மேலே வைத்து கிடந்த மலர் மார்பா- (தன்னுடைய) அகன்ற மார்பை வைத்துக் கிடப்பவனே! வாய் திறவாய்--வாய் திறந்து வார்த்தை சொல்லுவாயாக மைதடம் கண்ணினாய்-மையிட்டலங்கரித்த பரந்த கண்களை உடையவளே!  நீ-நீ உன் மணாளனை-உனக்குக் கணவனான கண்ணனை எத்தனை போதும்-ஒரு கணநேரமும் துயில் எழ- திருப்பள்ளியெழ ஒட்டாய்காண்-சம்மதிக்கிறாயில்லை எத்தனையேலும் - சிறிதுபோதும் பிரிவ...

திருப்பாவை பாசுரம் 18 - பதவுரை

பாசுரம்: உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய் வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: மதம் உந்து களிற்றன்- மதஜலத்தைப் பெருக விடுகின்ற யானை போல பலமுள்ளவராய் ஓடாத தோள் வலியன் — (யுத்த பூமியில்) பின் வாங்கவேண்டாத தோள் வலியை உடையவரான நந்த கோபாலன் - ஸ்ரீநந்தகோபருடைய  மருமகளே - மருமகளே!  நப்பின்னாய்-நப்பின்னை என்னும் பெயரை உடையவளே!  கந்தம் கமழும் குழலீ-பரிமளம் வீசும்படியான கூந்தலை உடையவளே!  கடை திறவாய்-வாயிலைத் திறப்பாயாக கோழி-கோழிகள் எங்கும் வந்து-நாற் புறங்களிலும் பரவி அழைத்தன காண்- கூவினகாண்! மாதவி பந்தல் மேல்-- குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்மேல் (உறங்கும்)  குயில் இனங்கள்- குயில் கூட்டங்கள்  பல் கால்-பலதடவைகள்  கூவினகாண்- கூவாநின்றனகாண் பந்து ஆர் விரலி—(கண்ணனை பந்துவிளையாட்டில் தோற்பிக்கைக்கு உபகரணமாயிருந்த) விளங்கும் விரல்களையுடையவளே!...

திருப்பாவை பாசுரம் 17 - பதவுரை

பாசுரம்:  அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த உம்பர்கோமானே உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். பதவுரை: அம்பரமே - வஸ்திரங்களையும்  தண்ணீரே-ஜலத்தையும் சோறே- சோற்றையுமே அறம் செய்யும்- தர்மம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா-எம் ஸ்வாமியான நந்தகோபரே!  எழுந்திராய் - எழுந்திருக்கவேணும் கொம்பு அனார்க்கெல்லாம்-வஞ்சிக்கொம்புபோன்ற பெண்களுக்கெல்லாம்.  கொழுந்தே - மேலாயிருப்பவளே!  குலம்விளக்கே - ஆயர்குலத்துக்கு மங்கள தீபமாயுள்ளவளே!  எம்பெருமாட்டி-எமக்குத் தலைவியாயிருப்பவளே!  அசோதாய்- யசோதைப்பிராட்டியே!  அறிவுறாய் - உணர்ந்தெழுவாயாக அம்பரம் ஊடு அறுத்து - ஆகாசவெளியைத் துளைத்துக் கொண்டு,  ஓங்கி-உயர்ந்து,  உலகு அளந்த - ஸகல லோகங்களையும் அளந்தருளிய  உம்பர் கோமானே - தேவதேவனே!  உறங்காது- கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய் எழுந்திருக்க வேணும்;  செம் பொன் கழல் அடி- சி...