விஷ்ணு புராணம் கலியுக தர்மம் (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கேசித்வஜ - காண்டிக்ய விவாதம் “நாம் முன்பு கூறியபடி, குணங்களும் விபூதிகளும் அவதார ஸ்வரூபமும் உள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் வெளிப்படுத்தப்படுவான். இந்த இரண்டு ஞானமும்தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும், ஆகையால் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் இறங்க வேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்த தத்வத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய யோகங்கள் இரண்டும் நன்றாய்ப் பரிமளித்தால் பரமாத்மா காணப்படுவான். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திரம் ஒரு கண் யோகம் மற்றொரு உயர்ந்த கண். பரப்பிரஹ்மமானவன் இந்தக் கண்களால் காணக் கூடியவனே தவிர இந்த மாம்சங்களாலான கண்களால் காணக்கூடியவனல்லன்” என்று பராசரர் உரைக்க, மைத்ரேயர் அவரை நோக்கி, “பராசர மகரிஷியே! எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரமேஸ்வரனை அடியேன் எத்தகைய யோகநெறியினால் காணமுடியுமோ அதை அடியேனுக்குச்சொல்லியருள வேண்டும்!” என்று ப்ரார்திக்க, "மைத்ரேயரே! பூர்வத்தில் காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் உபதேசித்தாற்போல், அந்த ...
YathirajaSampathKumar Iyengar's Blog